ஓட்டு போட.. உங்க ஆபீஸ் லீவு தரவில்லையா.. புகார் அளிக்க இதோ ஃபோன் நம்பர்
சென்னை: ஓட்டுப்போட உங்கள் நிறுவனம் வாய்ப்பு வழங்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம். இதற்கான தொலைபேசி எண்களை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
சட்டசபைத்தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதனை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து தொழில்நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியன தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.

ஒருவேளை விடுமுறை வழங்காவிட்டால், நிறுவனங்கள் மீது தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலானகட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் பா.மாதவன் - 9487269270, தொழிலாளர் துணை ஆணையர் டி.விமலநாதன் - 9442540984, தொழிலாளர் உதவி ஆணையர் ஓ.ஜானகிராமன் - 8610308192, தொழிலாளர் உதவி ஆணையர் எம்.மணிமேகலை - 9444647125, தொழிலாளர் உதவி ஆணையர் எஸ்.பி.சாந்தி - 7305280011 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications