ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: தேர்தல் பணிக்காக தெலுங்கானா சென்று வந்த ஊர் காவலர்களுக்கு சரியான ஊதியம் வழங்கவில்லை என்று 500க்கும் மேற்பட்ட ஊர்க் காவல் படையினர் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வாசலில் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பணிக்காக சென்னையில் இருந்து, 2,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றனர். இன்று காலை அவர்கள் சென்னை திரும்பி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திரண்டிருந்தனர்.

அதில் ஒரு பிரிவினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஒரு நாளைக்கு ரூ. 560 வீதம் , 5 நாளைக்கு 2800 ரூபாய் ஊதிய கணக்கில் , 80 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கி உள்ளதாகவும், இந்த 5 நாள் பணியில் எந்த உணவு, வசதியும் செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
1963 ல் இருந்து சமூகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் காவலாக வரும் ஹோம் கார்ட்ஸ் எனப்படும் ஊர்க் காவல்படையினர், தங்களுக்கு சரியான மதிப்பு வழங்கப்படாமல் கொத்தடிமைகளாக நடத்துவதாகவும்,
எப்பொழுதும் காலம் தாழ்த்தி ஊதியம் தருவதாகவும் குற்றம்சாற்றி வருகின்றனர்.
தங்களுக்கு பணி நிரந்தரம் செய்து கொடுக்க கோரியும், முறையான ஊதியம் வழங்க கோரியும் போராட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும் தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களில் ஊர்க் காவலர்களை பொது காவலர்களுக்கு இணையாக நடத்துவது போன்று , தங்களுக்கு மதிப்பு வழங்குமாறும் கேட்டனர். உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications