தமிழர்களின் விருந்தோம்பல் செம.. மனம் மகிழ்ந்தேன்.. வியந்து பாராட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!
தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டி இருக்கிறார்.
பெரும் பாதுகாப்பிற்கும் இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இன்று கோவளத்தில் நடக்கும் மாநாட்டில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

என்ன ஆலோசனை
இந்த ஆலோசனை கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் தமிழர்களை பாராட்டினார். அதில், மிக சிறப்பான வரவேற்பை நீங்கள் எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள். நாம் இதுபோல அடிக்கடி ஆலோசனைகளை செய்ய வேண்டும். அடிக்கடி கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த சந்திப்பு ஒரு நல்ல முடிவு.

பேச்சுவார்த்தை
என்னால் இந்த மாமல்லபுரம் சந்திப்பை மறக்க முடியாது. இது மிகவும் சிறப்பாக இருந்தது. மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பயனளித்தது. பிரதமர் மோடியுடன் நண்பர்களாக நாங்கள் பேசினோம்.

நல்ல உறவு
நம்மிடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. இனி இது நீடிக்கும் என்று நினைக்கிறேன். கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறோம். இந்தியா - சீனா இடையே புதிய நிலைத்தன்மை உருவாகியுள்ளது.

தமிழர்கள்
தமிழர்களின் விருந்தோம்பல் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை தற்போது நேரில் கண்டுள்ளேன். விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது; மனம் மகிழ்ந்தேன்.

சீனா எப்படி
சீன மக்கள் மத்தியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னுடைய இந்த பயணம் குறித்து சீனா முழுக்க பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சீனாவின் செய்திகள் எல்லாம் இதுதான் முக்கிய செய்தியாக இடம்பிடித்து இருக்கிறது. என்று ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications