தமிழர்களின் விருந்தோம்பல் செம.. மனம் மகிழ்ந்தேன்.. வியந்து பாராட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!
தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டி இருக்கிறார்.
பெரும் பாதுகாப்பிற்கும் இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இன்று கோவளத்தில் நடக்கும் மாநாட்டில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
உங்களை வரவேற்கிறேன்.. சீன அதிபரிடம் தமிழில் பேசிய மோடி.. சென்னை கனக்ட் குறித்து பெருமிதம்!
என்ன ஆலோசனை
இந்த ஆலோசனை கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் தமிழர்களை பாராட்டினார். அதில், மிக சிறப்பான வரவேற்பை நீங்கள் எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள். நாம் இதுபோல அடிக்கடி ஆலோசனைகளை செய்ய வேண்டும். அடிக்கடி கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த சந்திப்பு ஒரு நல்ல முடிவு.
பேச்சுவார்த்தை
என்னால் இந்த மாமல்லபுரம் சந்திப்பை மறக்க முடியாது. இது மிகவும் சிறப்பாக இருந்தது. மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பயனளித்தது. பிரதமர் மோடியுடன் நண்பர்களாக நாங்கள் பேசினோம்.
நல்ல உறவு
நம்மிடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. இனி இது நீடிக்கும் என்று நினைக்கிறேன். கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறோம். இந்தியா - சீனா இடையே புதிய நிலைத்தன்மை உருவாகியுள்ளது.
தமிழர்கள்
தமிழர்களின் விருந்தோம்பல் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை தற்போது நேரில் கண்டுள்ளேன். விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது; மனம் மகிழ்ந்தேன்.
சீனா எப்படி
சீன மக்கள் மத்தியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னுடைய இந்த பயணம் குறித்து சீனா முழுக்க பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சீனாவின் செய்திகள் எல்லாம் இதுதான் முக்கிய செய்தியாக இடம்பிடித்து இருக்கிறது. என்று ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.