சென்னை வந்த சீன கப்பல்.. கூண்டுக்குள் இருந்த பூனை.. அதிகாரிகள் அச்சம்.. பின்னணி மர்மம் என்ன?
Recommended Video
சென்னை: சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பல் கன்டெய்னரில் இருந்த ஒரு அழையா விருந்தாளி, நேற்று அதிகாரிகள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.
ஆம்.. கண்டெய்னரின் ஒரு பகுதியில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு பூனை இருந்தது. அதுவும் சீனாவிலிருந்து வந்த கப்பல் என்பதால், அதிகாரிகள் அச்சப்பட்டு, விலங்கு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பூனைக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதிக்கும் பணிகள் தொடங்கின. முதல்கட்ட சோதனையில் அப்படி எதுவும் இல்லை என தெரியவந்தது.

தனிமை
இருப்பினும் அந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த பூனையை யார் ஏற்றினார்கள் என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. இதுதொடர்பாக துறைமுக அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் சிலர் கூறுகையில், வழக்கமாக இதுபோல ஏதாவது விலங்குகள் வரும். ஒருமுறை, உணவு பொட்டலங்கள் வந்த கண்டெய்னருக்குள், பாம்புகளை கூட பார்த்துள்ளோம். யதேர்ச்சையாக இப்படி எங்காவது ஏறி வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

விதிமுறை
விதிமுறைப்படி, உயிருடன் ஏதாவது விலங்குகள், கப்பலில் வரும்போது பிடிபட்டால், விலங்குகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டுமாம். 3 நாட்கள் அங்கே வைத்திருந்து, உரிமையாளர் யாரும் உரிமை கோராவிட்டால், அதை திருப்பியனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. பூனையை, திருப்பியனுப்பிவிட வேண்டும் என்றுதான், சுங்க அதிகாரிகள் விரும்புகிறார்களாம். எனவே, பூனை பிடிபட்ட தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்படுவதாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.

நடுவே ஏறியிருக்குமோ
மேலும் சில அதிகாரிகள் கூறுகையில், இது சீனாவிலிருந்த வந்த பூனையாக இருக்காது. 10 முதல் 20 நாட்கள் கடல் பயணத்தில், தண்ணீர் மற்றும் சாப்பாடு உண்ணாமல், அந்த பூனையால் எப்படி வந்திருக்க முடியும்? கப்பல் சென்னை வரும் வழியில், சிங்கப்பூர் அல்லது கொழும்பு போன்ற எங்காவது, இந்த பூனை ஏறியிருக்க கூடும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், பூனை தொடர்பான மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.

கூண்டு
ஒருவேளை தவறுதலாக கப்பலில் ஏறியிருந்தால், பூனை எப்படி கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் இருந்தது என்ற சந்தேகமும் வராமல் இல்லை. அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக கருத்து கூறினால்தான், அந்த மர்மம் விலகும். அதுவரை, துறைமுக ஊழியர்களிடையே, சீனா கப்பலில் வந்த பூனை, பீதி குறையப்போவது இல்லை என்று மட்டும் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications