ஊரக உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும்? எப்போது தொடங்கும்?
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு முடிந்துவிடும்.

2 அதிகாரிகள்
இந்த தேர்தலில் ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பொதுமக்கள் வாக்களிக்க முடியாது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அந்தந்த மாவட்ட திட்ட அதிகாரிகள் தலைமையில் 2 அதிகாரிகள் கொண்ட குழு நடத்தும்.

விரும்புவோர்
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை மாவட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு நடத்தும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதிகாரிகளிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

டிக் மார்க்
அவ்வாறு பதிவு செய்யும் பெயர்களை அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளில் அகர வரிசைப்படுத்தி எழுதி வைத்திருப்பர். அந்த வாக்குச் சீட்டுகளில் தங்களுக்கு விருப்பமானவரின் பெயருக்கு நேராக பேனா மூலம் டிக் மார்க் இட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை
இதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்த பின்னர் வாக்குப் பெட்டியை திறந்து யார் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அதிகாரிகள் அறிவிப்பர். எனவே பிற்பகல் 3.30 மணிக்கு மறைமுக தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications