ஊரக உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும்? எப்போது தொடங்கும்?
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு முடிந்துவிடும்.

2 அதிகாரிகள்
இந்த தேர்தலில் ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பொதுமக்கள் வாக்களிக்க முடியாது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அந்தந்த மாவட்ட திட்ட அதிகாரிகள் தலைமையில் 2 அதிகாரிகள் கொண்ட குழு நடத்தும்.

விரும்புவோர்
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை மாவட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு நடத்தும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதிகாரிகளிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

டிக் மார்க்
அவ்வாறு பதிவு செய்யும் பெயர்களை அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளில் அகர வரிசைப்படுத்தி எழுதி வைத்திருப்பர். அந்த வாக்குச் சீட்டுகளில் தங்களுக்கு விருப்பமானவரின் பெயருக்கு நேராக பேனா மூலம் டிக் மார்க் இட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை
இதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்த பின்னர் வாக்குப் பெட்டியை திறந்து யார் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அதிகாரிகள் அறிவிப்பர். எனவே பிற்பகல் 3.30 மணிக்கு மறைமுக தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications