அதிமுக பொதுக்குழு எப்படி கூடியது? நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி.. எடப்பாடி சொன்ன பரபர விளக்கம்!
சென்னை: அதிமுக பொதுக்குழு சட்டப்படிதான் கூடியதா என்று உயர் நீதிமன்றம் நேற்றும் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று மனுதாரர் ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், இந்த பொதுக்குழு கூடியதே சட்ட விரோதமானது.
விதியை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அதேபோல் இன்னொரு மனுதாரர் அம்மான் வைரமுத்து சார்பாக இதே வாதம் வைக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி கூட்டி உள்ளனர். இதற்கு முறையாக நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை.

வழக்கு விசாரணை
15 நாட்களுக்கு முன் பொதுக்குழு நடத்த நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் விதியை பின்பற்றாமல் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஒருவேளை பொதுக்குழுவை விதிகளை மீறி கூட்டப்பட்டு இருந்தால் அது தவறு. அதற்கு ஏற்றபடி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் நேற்று இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

சரமாரி கேள்வி
அதோடு பொதுக்குழு சட்டப்படி நடந்ததா என்று எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்று நீதிபதி நேற்று குறிப்பிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று அளித்த பதிலில், பொதுக்குழு சட்டப்படிதான் கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

கோரிக்கை
அவர்கள் கோரிக்கையை ஏற்றுதான் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்காக 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சரியாக 18 நாட்களுக்கு முன்பே இதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஜூலை 1ம் தேதி அழைப்பிதழும் அனுப்பப்பட்டுவிட்டது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே அறிவித்தோம். இது டிவியிலும் காட்டப்பட்டது. அதனால் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது.

ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு ஜூலை 23ம் தேதி அங்கீகரிக்கவில்லை. இதனால் அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதன் காரணமாக மூத்த உறுப்பினர்கள் மூலம் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மெஜாரிட்டி உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில்தான் இந்த கூட்டம் கூடியது. எனவே பொதுக்குழு சட்ட ரீதியாக கூடவில்லை என்று கூற முடியாது, என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications