Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் போன் செய்யும் நேரத்தில் நடந்த சம்பவம்.. வாடிய பிரக்ஞானந்தா முகம்.. அடுத்து நடந்த சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை; செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலினும் போன் செய்த போது என்ன நடந்தது?இந்த போன் கால் இணைப்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகம் முழுக்க கவனிக்கப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ஆடிய விதம் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது. அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

How did CM Stalin talk to chess sensation R Praggnanandha after FIDE World cup Finals?

உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், டை பிரேக்கர் வரை சென்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று பைனலுக்கு சென்றார். பைனலில் மேக்னஸ் கார்ல்சன் உடன் நடந்த ஆட்டத்தில் முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிய 3வது சுற்றில் பிரக்ஞானந்தா டை பிரேக்கரில் தோல்வி அடைந்தார்.

இதன் மூலம் அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். அவர் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும் உலக நாடுகள் அவரின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றன.

முதல்வர் ஸ்டாலினும் கூட பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதில், செஸ் உலகக்கோப்பை போட்டியில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்க்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மிளிருங்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு பிரக்ஞானந்தாவின் அம்மாவிற்கு போன் செய்து அவரிடம் தனது பாராட்டுகளை தெரிவித்தார். பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் போன் செய்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலினும் போன் செய்த போது என்ன நடந்தது?இந்த போன் கால் இணைப்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

போன் பிரச்சனை: இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியும் , எழுத்தாளருமான ஸ்ரீதரன் மதுசூதனன் போஸ்ட் செய்துள்ளார். அதில், FIDE உலகக்கோப்பை நிறைவு விழாவுக்கு வந்து உட்கார்ந்த பிரக்ஞானந்தா Praggnanandhaa R. முகம் சரியாயில்லை. "என்னப்பா?" என்றேன்.

தமிழக முதல்வர் M. K. Stalin அவர்கள் பிரக்ஞானந்தாவையும் அவரது அம்மா நாகலட்சுமியையும் காணொளி வழியே அழைத்து வாழ்த்திப் பாராட்ட விரும்புவதாக முதல்வர் அலுவலகத்திலிருந்து சொன்னார்களாம். ஆனால், பிரக்ஞானந்தாவின் தொலைபேசி இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை.
நான் எனது தொலைபேசி இணைப்பிலிருந்து hotspot கொடுத்தும் இணைப்பு வேலை செய்கிறதா என்று சந்தேகமாகவே இருந்தது.

உலகக்கோப்பை பரிசளிப்பு விழா துவங்கிவிட்டது. எக்கணமும் அவரை மேடைக்கு அழைக்கலாம் என்கிற சூழல். இந்தியா நேரமோ இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் விழா முடிந்ததும் பேசலாம் என்பதும் சாத்தியமில்லை.

முதல்வர் அலுவலகத்துக்கு என்னுடைய தொலைபேசி எண் தந்து அழைக்கச் சொன்னேன். முதல்வர் லைனில் வரும்முன்பு, "வணக்கம் சொல்லு, நல்லா பேசு" என்று நாகலட்சுமி பிரக்ஞானந்தாவுக்குச் சொன்னார். தில்லிக்கு ராஜான்னாலும் அம்மாவுக்குப் பிள்ளை தானே., என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+