மேட்சுக்கு இடையே நடந்த அந்த சம்பவம்.. ஸ்டன் ஆன தோனி! உற்று பார்த்த ஆர்ஆர்.. சிஎஸ்கே வீரரால் பரபரப்பு
சென்னை: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பவுலர் செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக சிஎஸ்கே அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது.

முன்னதாக சென்னையில் நடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.
நேற்று முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 202/5 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. இதில் ராஜஸ்தான் தொடக்க வீரர் யேசெஸ்வி ஜெய்ஷ்வால் 77 ரன்கள் எடுத்தார். அதேபோல் துருவ் ஜூரேல் 34 ரன்கள் எடுத்தார்.
ஜோஸ் பட்லரும் 27 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்ட முயன்றாலும் முடியவில்லை. கான்வே எவ்வளவு அடிக்க முயன்றும் 8 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.
ஆனால் ருத்துராஜ் மட்டும் அதிரடியாக ஆடி 47 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சிவம் துபே 52 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஜடேஜா 23 ரன்கள் எடுக்க இவர்கள் இருவரும் கடைசி ஓவர்களில் அடிக்க முயன்றும் கூட சிஎஸ்கே அணியால் வெற்றிபெற முடியவில்லை.

சிஎஸ்கே அணி 20 ஒவர் முடிவில் 170-6 ரன்கள் மட்டுமே எடுக்க 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சுவாரசிய சம்பவம்
நேற்று இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் பதிரானா ஒரே ஓவரில் மூன்று முறை 150 கிமீ வேகத்தில் பந்து வீச வந்தார். 149.9, 149.8, 149.5 கிமீ வேகங்களில் மூன்று முறை பவுலிங் செய்தார்.
20 வயதே ஆன இளம் வீரர் ஒருவர் இப்படி மூன்று பந்துகளை அடுத்தடுத்து கிட்டத்தட்ட 150 கிமீ வேகத்தில் பந்து வீசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆர்ஆர் வீரர்களும் இவரின் பவுலிங் வேகத்தை உற்று பார்த்தனர்.
இவரை தொடர்ந்து ஆதரித்து வரும் தோனியும் அந்த பந்துக்கு கை தட்டி இவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பதிரானா வந்த பின் சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. முக்கியமாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே சிறப்பாக, பிரஷர் இல்லாமல் பவுலிங் செய்ய தொடங்கி உள்ளது.
இதற்கு முன் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு இருந்த பிரஷர் பதிரானா வந்த பின் இல்லை.
இலங்கையில் இருந்தவருக்கு ஸ்பெஷல் மெசேஜ் அனுப்பி அவரை இந்தியா கொண்டு வந்து தோனி தொடர்ந்து இவருக்கு ஆதரவு அளித்து வருவது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications