ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி? அதை நோண்டுங்க.. அண்ணாமலை ஆவேசம்!
சென்னை: தேர்தல் பத்திர நன்கொடை தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், "ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்யும் திமுகவுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை?" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பத்திர நிதி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் பத்திர நிதி - பாஜக: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர விபரங்களை எஸ்பிஐ வங்கி கடந்த மார்ச் 12ஆம் தேதி மாலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தமது இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி.
நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.
கோடி கோடியாக கொட்டிய நிறுவனங்கள்: இந்தப் பட்டியலில் வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன.
நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது.
பாஜக மீது விமர்சனம்: பெரு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக நிதியைப் பெற்றுள்ள ஆளும் பாஜக, அவர்களுக்கு அனுகூலம் செய்துள்ளதாகவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்பட்ட சில நாட்களில் தேர்தல் நன்கொடைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இதில் ஒளிப்பதற்கு ஒன்றுமே இல்லையே.. எல்லாமே வெளிப்படையாகத்தானே இருக்கிறது. மம்தா பானர்ஜி கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துகொண்டு ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளது.
திமுகவுக்கு எப்படி இவ்வளவு?: திமுக ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டு இவ்வளவு நிதி பெற்றுள்ளதே.. நாங்கள் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். எத்தனை அரசாங்கத்தை நடத்துகிறோம்.. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வந்துள்ள நிதி இவ்வளவு. திமுக ஒரு மாநிலத்தில் ஆளும்போது எப்படி இவ்வளவு வந்தது?
திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான். அதை கேள்வி கேட்க வேண்டும். தேர்தல் பத்திர நிதியில் என்ன தவறு? முன்பு பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து நிதி கொடுப்பார்கள். அது வேண்டாம் என தேர்தல் பத்திர நிதி திட்டத்தை கொண்டு வந்தோம். இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் அதற்கு முயற்சி எடுக்கிறோம். அரசு தான் முயற்சி எடுக்கவேண்டும்.
திமுகவுக்கு யாரெல்லாம் கொடுத்தார்கள்?: எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது எனப் பாருங்கள். மம்தா பானர்ஜி நேற்று மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். திமுகவுக்கு யாரெல்லாம் தேர்தல் பத்திரம் நிதி மூலம் கொடுத்திருக்கிறார்கள் என்று நோண்டிப் பாருங்கள். பாஜக எப்போதும் வெளிப்படைத்தன்மையை வரவேற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் வரலையா? வெறும் 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம்.. எப்படி? -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications