வேலூரில் தேர்தலையே நடத்த முடியாத துரைமுருகன், எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்.. தமிழிசை
சென்னை: வேலூரில் தேர்தலையே நடத்த முடியாத, துரைமுருகன் எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பா.ஜ.க., சார்பில் அஞ்சலி செலுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் தீவிரவாதத்தை யார் கையில் எடுத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியதுடன், ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பொள்ளாச்சியை மிஞ்சும் தெலுங்கானா.. பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிய சீனிவாச ரெட்டி.. பரபர தகவல்கள்
மேலும் வேலூரில் தேர்தலையே நடத்த முடியாதபோது, திமுக பொருளாளர் துரைமுருகன் எப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். மேலும் தூத்துக்குடி கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் உறுதி தெரிவித்தார்.