Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபாரீன் ரிடர்ன்.. வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கத்தை சுங்கக் கட்டணம் இன்றி எடுத்து வரலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாடுகளில் பணி நிமித்தமாக தங்கிவிட்டு இந்தியா வருபவர்கள் சுங்கக்கட்டணம் இல்லாமல் எந்த அளவு தங்கம் கொண்டு வரலாம்? யார் யார் தங்கம் கொண்டு வரலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் எவ்வளவுதான் நகைக்கடைகள் இருந்தாலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வீட்டுப் பெண்கள், இது துபாய் நகை, சவுதி நகை, மலேசியா நகை என்று சொல்வதை விரும்புவார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, வெளிநாட்டு நகை என்றால் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.

How much amount of gold to be taken to India from abroad as duty free?

இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பணிபுரிந்து சொந்த ஊருக்கு திரும்பும் என்.ஆர்.ஜக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆசை ஆசையாக தங்கம் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் ஒவ்வொரு நாடுகளை பொறுத்தும் தங்கம் விலை மாறுபடுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் கொண்டு சென்றால் அதற்கு சுங்கக் கட்டணத்தை இந்திய அரசு வசூலிக்கிறது.

ஆனால், இந்த சுங்கக்கட்டணத்தை கட்டாமல் தவிர்க்க பல்வேறு வடிவங்களில் தங்கத்தை மறைத்து விமானம், கப்பல் போக்குவரத்து மூலம் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இப்படி தினமும் பல கோடிக்கணக்கிலான தங்க நகைகள் கடத்தல் காரர்களிடம் இருந்து பிடிபடுகின்றன.

அதுமட்டுமின்றி யார் யார் எந்த அளவில், எந்த வடிவில் தங்கத்தை எடுத்து சென்றால் சுங்க கட்டணம் இல்லை என்ற விபரம் சாமானிய மக்களுக்கும் தெரியாமல் கூடுதல் நகையை கொண்டு சென்று விமான நிலையத்தில் அபராதத்தை கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே இதற்கென இந்திய அரசு வகுத்துள்ள விதிகளை பார்ப்போம்.

சுங்கக்கட்டணம் இன்றி யார் எவ்வளவு தங்க நகையை கொண்டு செல்லலாம்?: இந்திய குடிமகனாக அவர் இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்திருக்க வேண்டும். ஆண்கள் ரூ.50,000 என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை கொண்டு வரலாம். பெண்கள் ரூ.1 லட்சம் என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை எடுத்து வரலாம். நகையாக இருந்தால் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. தங்க கட்டிகள், தங்க காசுகளுக்கு சுங்கக் கட்டணம்.

இந்திய அரசு வகுத்துள்ள இந்த வரையறைகளை தாண்டி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும். அதேபோல் மேற்கண்ட விதிகள் வெளிநாடுகளில் வாங்கிய நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் வாங்கி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டத் தேவையில்லை. இந்த அளவு, வரையறை தாண்டி தங்கம் கொண்டு சென்றால் அது தொடர்பாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

அவர்களில் சொல்லாமல் மறைத்து கண்டுபிடிக்கப்பட்டால் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் அல்லது கைது செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த அளவை தாண்டி நகை வாங்கி செல்பவர்கள் ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியவர்களாக இருந்தால் சுங்கக் கட்டணத்தில் 13.75% தள்ளுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+