டேபிள் துடைத்த "பாய்" முதல் ராஜகோபால் ஹோட்டல்களின் ராஜாவான கதை!
Recommended Video
சென்னை: ஒரு சிறிய ஹோட்டலில் டேபிள் துடைத்து வந்த ராஜகோபால் இன்று வெளிநாடுகள் வரை தனது ஹோட்டல் தொழிலை விஸ்தரிக்கும் அளவுக்கு சிகரத்தை தொட்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணையாடி எனும் குக்கிராமத்தில் 1947-ஆம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தார் ராஜகோபால். இவரது கிராமத்துக்கு பேருந்து வசதி கூட இல்லை. வறுமையால் 7-ஆம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலை தேடி சென்னை வந்தார்.
அப்போது ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலையை செய்த அவர் இரவு நேரத்தில் கட்டாந்தரையில் படுத்து உறங்கினார். அப்படியே மெல்ல மெல்ல டீ போட கற்றுக் கொண்டார். பின்னர் அப்படியே சமையல் வேலைகளையும் கற்றார்.

தி நகர்
இந்த நிலையில் ஒரு மளிகை கடையில் பணிபுரிந்த ராஜகோபால் தனது உறவினர்களின் உதவியால் சிறிய மளிகைக் கடையை திறந்தார். கடந்த 1979-ஆம் ஆண்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சாப்பிடுவதற்காக திநகர் செல்கிறேன் என்றார்.

சரவணபவன்
உடனே அண்ணாச்சிக்கு ஒரு ஐடியா உதயமானது. கேகே நகரில் ஹோட்டல் இல்லாததால் பெரும்பாலானோர் தி நகர் சென்று உணவருந்துகின்றனர். எனவே நாம் ஒரு ஹோட்டலை தொடங்குவோம் என எண்ணி 1981-ஆம் ஆண்டு சரவணபவனை தொடங்கினார்.

ஆலோசனை
மற்ற ஹோட்டல்களில் ஏதோ வயிறு நிரம்பினால் போதும் என்ற நிலை இருந்த போது தரமான பொருட்களை கொண்டு சுவையான உணவை அளித்தார். இதனால் ஆரம்பத்திலேயே நஷ்டத்தை சந்தித்தார். ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்போம், தரமற்ற பொருட்கள வாங்குவோம் என ஆலோசனை கூறிய அதிகாரியை வீட்டுக்கு அனுப்பினார்.

சாம்ராஜ்ஜியம்
பின்னர் ஒவ்வொரு மாதமும் ரூ 10 ஆயிரம் இழப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. எனினும் உணவகத்தின் மீது மதிப்புக் கூட கூட இந்த இழப்பீடுகள் அப்படியே லாபமாக மாறின. இப்படித்தான் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை ராஜகோபால் வகுத்தார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications