கையில் உள்ள கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி! இதை மட்டும் செய்யுங்க.. இதற்கு உள்ள கண்டிஷன்கள் என்ன
சென்னை: உங்கள் கையில் கிழிந்த நோட்டை வைத்துக் கொண்டு மாற்ற முடியாமல் சிரமப்படுகிறீர்களா.. அதை எப்படி மாற்றலாம்.. அதில் கண்டிஷன்கள் எதாவது இருக்கிறதா என்பதை நாம் இதில் பார்க்கலாம்.
திடீரென நம்மிடம் எப்படியோ கிழிந்த அல்லது பழைய ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டது என்றால் அதை எப்படி மாற்ற வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.

அதேபோல வங்கிகளிலும் கூட இதுபோன்ற கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகளை வாங்கிக் கொள்வார்களா என்ற கவலை பலருக்கும் இருக்கும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி: கிழிந்த நோட்டுகளை நாடு முழுக்க இருக்கும் வங்கிகள் அனைத்தும் வாங்கிக் கொள்ளும். இருப்பினும், நாம் எவ்வளவு தொகைக்கு இதுபோல ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறோம் என்பதைப் பொறுத்து விதிகள் மாறுபடும்.
அழுக்கான நோட்டுகள்: அழுக்கான நோட்டுகள் என்பது வழக்கமான பயன்பாடு காரணமாக அழுக்காகிவிட்டதைக் குறிக்கும். பொதுவாக ஒரு நோட்டு கிழிந்து போனால் நாம் பசையை வைத்து ஓட்டுவோம். அதையும் அழுக்கான நோட்டுகள் என்றே குறிப்பிடுவார்கள். அதே நேரம் செலோடேப்பை வைத்து இதுபோன்ற நோட்டுகளை ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் ரூபாய் நோட்டின் இரு பகுதிகளும் ஒரே நோட்டைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும்.. மிஸ்ஸிங் பகுதிகள் எதுவும் இருக்கக்கூடாது.
இந்த நோட்டுகளை வங்கி கவுண்டர்களில் கொடுத்து ரொக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.. ஆனால் பெரும்பாலான வங்கிகளில் நமது கையில் ரொக்கமாகத் தர மாட்டார்கள். வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைத்துவிடுவார்கள்.
சிதைந்த நோட்டுகள்: அடுத்துச் சிதைந்த நோட்டுகள். இதை Mutilated notes என்பார்கள். ஒரு நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக இருந்தாலோ அல்லது அதன் ஒரு பகுதி மிஸ் ஆகி இருந்தாலோ அது சிதைந்த நோட்டுகள் என்று அழைக்கப்படும். இதையும் நாம் வங்கிகளில் கொடுத்து எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.
ரூல்ஸ் என்ன: சரி ஒருவர் அதிகபட்சம் எத்தனை ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்... ஒரு நாளைக்கு ஒருவர் கிழிந்த நிலையில் இருக்கும் 20 நோட்டுகளை மாற்ற முடியும்.. இருப்பினும், அதன் மொத்த மதிப்பு 5,000 ரூபாய்க்கு குறைவாகவே இருக்க வேண்டும். இதை நாம் இலவசமாக வங்கி கவுண்ட்டர்களிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
5000 ரூபாய்க்கு மேல் என்றால் வங்கி ரசீதுகள் தேவை.. மேலும், இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணங்களும் வசூலிக்கப்படும். அதேநேரம் மாற்ற வேண்டிய தொகை ரூ.50,000-க்கும் மேல் என்றால் நீங்கள் உங்கள் அடையாள சான்றிதழ்களையும் கூட சமர்ப்பிக்க நேரிடலாம்.
கருகிய நோட்டுகள்: கிழிந்த நோட்டுகளில் கடைசியாக ஒரு வகை இருக்கிறது. அவை தான் மிக மிக மோசமான நிலையில் இருக்கும் நோட்டுகள். எரிந்த, கருகிய அல்லது மிகவும் கசங்கிய நிலையில் இருக்கும் நோட்டுகள் இந்த ரகத்தில் தான் வரும். இதுபோல இருக்கும் நோட்டுகளை பொதுவாக வங்கிகள் ஏற்றுக்கொள்ளாது.
இந்த நோட்டுகளை நீங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற முடியும். ரிசர்வ் வங்கியிடம் இந்த நோட்டுகளைச் சமர்ப்பித்தால் அவர்கள் ஆய்வு செய்து இந்த நோட்டுகளை மாற்றித் தருவார்கள்.
எப்படி: குறைவான நோட்டுகள் என்றால் ரிசர்வ் வங்கியின் நான்-செஸ்ட் கிளைகளில் கூட மாற்றிக் கொள்ளலாம். ஐந்து அல்லது அதற்குக் குறைவான சிதைவடைந்த நோட்டுகளை மாற்றுகிறீர்கள் என்றால் அதை நேரடியாக ரிசர்வ் வங்கி கவுண்ட்டரிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
விதிகள்: அதேநேரம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவது குறித்து அவர்கள் இறுதி முடிவை எடுக்க முடியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகள் சிதைவடைந்து இருந்தால்.. அவை அடுத்தகட்டமாக ரிசர்வ் வங்கியின் செஸ்ட் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்குப் பணம் எப்போது கிடைக்கும் என்பது குறித்த ரசீதும் வழங்கப்படும். பொதுவாக 30 நாட்களில் உங்களுக்குப் பணம் வந்துவிடும். உங்கள் வங்கிக் கணக்கில் அந்த தொகை நேரடியாகச் செலுத்தப்படும்.
ஐந்துக்கும் மேற்பட்ட நோட்டுகள், அவற்றின் மதிப்பு ரூ. 5,000 வரை இருந்தால் அதை நீங்கள் ரிசர்வ் வங்கியின் செஸ்ட் கிளைகளில் மட்டுமே மாற்ற முடியும். இந்த நோட்டுகளை நீங்கள் செஸ்ட் வங்கிகளுக்கு insured post மூலம் அனுப்பினால் போதும். அத்துடன் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் அனுப்ப வேண்டும். அதை ஆய்வு செய்து நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தப்படும். இதற்கு நீங்கள் நேரடியாக வங்கி கிளைக்குச் செல்ல தேவையில்லை.
அதேநேரம் 5,000 ரூபாய்க்கு மேலான தொகையை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியின் செஸ்ட் கிளைக்குச் செல்ல வேண்டும். உங்களிடம் சில விவரங்களை வங்கி கேட்கலாம். நீங்கள் சமர்ப்பித்த நோட்டுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் 30 நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தப்படும்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்











Click it and Unblock the Notifications