பொது நல மனுக்களை தாக்கல் செய்வது எப்படி? சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்
சென்னை: பொது நல மனு தாக்கல் செய்யும் போது உரிய கள ஆய்வு மெற்கொள்ள வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், பொது நல மனு தாக்கல் செய்யும் போது உரிய கள ஆய்வு மெற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
பொது நல மனுக்களை தாக்கல் செய்பவர்கள் உரிய களவு ஆய்வு மேற்கொண்ட பிறகு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகே கோர்ட்டிற்கு வர வேண்டும்.
பொது நல மனு தாக்கல் செய்யும் மனுதாரர், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆர்.டி.ஐயில் அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் தகவல்களை பெற்று மனுவுடன் அந்த விவரங்களை தாக்கல் செய்வது கூடுதல் பலமாக அமையும். ஆனால் அப்படி இல்லாமல் வெறும் புகைப்படங்கள் உள்ளிட்ட சில தகவல்களுடன் மட்டுமே பொது நல மனுக்களை தாக்கல் செய்தால் உரிய நிவாரணம் அளிக்க முடியாது" என்று கூறினார்.
மேலும், மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications