கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகைத் தேநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? டாக்டர் விளக்கம்
சென்னை: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகைத் தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பாரம்பரிய மருத்துவர் டாக்டர் வீரபாபு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில கொரோனா பாதிப்பை தடுக்க கபசுர குடிநீர் , மூலிகை தேநீர் பருகலாம் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறி வருகின்ன்றனர்.
இந்நிலையில் மூலிகை தேநீரை பருகி தொடர்ந்து பருகி கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய முறை
இது தொடர்பாக சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் வீரபாபு கூறுகையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சைகளும் மூலிகை உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது அவர்களை நோய் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வர பெரிதும் உதவுகிறது.

மூலிகை தேநீர்
கொரோனா போன்ற வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில மூலிகை பானங்கள் உதவுகின்றன அந்த வகையில் கபசுர குடிநீருடன் மூலிகை தேநீரை பருகி வருதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மூலிகை தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடியும்.

எப்படி தயாரிப்பது
சுக்கு 100 கிராம். அதிமதுரம் 100 கிராம். சிற்றரத்தை 30 கிராம். கடுக்காய் தோல் 30 கிராம், மஞ்சள் 10 கிராம், திப்பிலி 5 கிராம். ஒமம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், மிளகு 5 கிராம். எடுத்துக் கொண்டு அவை அனைத்தையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 400 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மூலிகை பொடியை கலது நன்கு காய்ச்சி 100 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

எவ்வளவு பருகலாம்
பின்னர் அதனை ஆறவைத்து பருகலாம். இந்த மூலிகை தேநீரை பெரியவர்கள் 100 மில்லியும். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 60 மில்லியும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 30 மில்லியும் தொடர்ந்து பருகுதல் அவசியம்.
Recommended Video

கருப்படி சேர்த்து பருகலாம்
மூலிகை தேநீரைக் கொதிக்க வைக்கும் போது கற்பூரவல்லி, புதினா, எலுமிச்சை, இஞ்சி சேர்த்துக் கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெல்லம் கருப்பட்டி, நாட்டுக்கரை சேர்த்து இந்த தேநீரை பருகலாம்" இவ்வாறு கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications