சென்னையில் ஆசையோடு போன என்ஜினியருக்கு ஆயுசுக்கும் மறக்க முடியாத பரிசு.. பூவிதா பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்த என்ஜினீயரை காதலித்து ஏமாற்றி உல்லாசத்துக்கு அழைத்து கொள்ளையடித்தது ஏன் என இளம்பெண் பூவிதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 37 வயதாகும் விக்னேஸ்வரன் என்ஜினீயர் ஆவார். இவரை காதலிப்பது போன்று நடித்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 19 வயதாகும் பூவிதா என்ற பெண் உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பான என்ஜினீயர் அளித்த புகார் பூவிதா மற்றும் அவரது நண்பர்கள் ஏழுமலை, கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் நீதிமன்ற காவலில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதான பூவிதா இப்படியான வழக்கில் கைதானவது முதல்முறையாகும். முதல்முறை குற்ற வழக்கில் கைதாகி உள்ள பூவிதா நண்பர்ககளால் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளார். பூவிதாவின் நண்பர்கள் இரண்டு பேர் மீதும் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் இருக்கின்றன. பூவிதாவிற்கு கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது.
முதல்முறை கொள்ளை வழக்கில் கைதாகி பூவிதா, ஏன் இப்படி கொள்ளைக்காரியாக மாறினார் என்பதை போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பூவிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் வெளியிட்ட தகவலின்படி,
பூவிதா சென்னை எண்ணூரில் பிறந்து வளர்ந்துள்ளார. பள்ளி படிப்பு வரை படித்துள்ளார். அவரது தந்தை டிரைவராக உள்ளார். அவருக்கு அண்ணனும், அக்காவும் இருக்கிறார்கள். தன்னுடைய இளம் வயதிலேயே உறவுக்கார பெண் ஒருவரால் தவறான பாதையில் தள்ளப்பட்டுள்ளார்.. இந்த சூழ்நிலையில் தான் என்ஜினீயர் விக்னேஸ்வரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூவிதாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
விக்னேஸ்வரன் மற்றும் பூவிதா இருவரும் அடிக்கடி செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். விக்னேஸ்வரனை பொறுத்தவரை அவர் ஏற்கனவே கல்யாணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இதனால் பூவிதா மீது காதல் பைத்தியமாக மாறி உள்ளார். பூவிதாவை திருமணம் செய்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். மேலும் பூவிதாவின் மேல் என்ஜினீயர் மோகம் கொண்டு இருந்திருக்கிறார்..
அவரை தனிமையில் சந்திக்க விரும்பி வற்புறுத்தினாராம்.. ஆனால் ஏழுமலையுடன் எம்.ஜி.ஆர். நகரில் பூவிதா வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் அவரை சந்திக்க விரும்புவதை ஏழுமலையிடம் பூவிதா கூறியுள்ளார். அவரை வரச்சொல். அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஏழுமலை பூவிதாவிடம் கூறினாராம். இதனால் விக்னேஸ்வரனை வரவழைத்துள்ளார்.
முதலில் அவரை மிரட்டுவதற்குதான் முடிவு செய்து இருந்துள்ளார்கள். திடீரென்று ஏழுமலையும், கிருஷ்ணனும் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஸ்வரனிடம் பணத்தை பறித்துள்ளார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத பூவிதா நண்பர்களின் திட்டத்தால் கொள்ளைக்காரி என்ற பட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.. இவ்வாறு போலீசார் விசாரணை குறித்த தகவலை தெரிவித்தனர்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications