திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சமணர்களின் தூண்.. உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை வாதம்
சென்னை: மனுதாரர் ராமரவிக்குமார் தீபம் ஏற்ற கூறிய தூணானது சமணர்கள் பயன்படுத்திய தூண் என்றும், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளது தான் உண்மையான தீபத் தூண் என்று அறநிலையத்துறை சார்பில் கோர்டில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்கள் தான் இது, மதுரையின் உள்ள அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்றும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடமான உச்சி பிள்ளையார்கோயில் அருகே உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் ராமரவிக்குமார் என்பவர் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மலை மீது ஏறி ஆய்வு செய்துவிட்டு பின்னர் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் வழக்கம் போல் இந்த ஆண்டு கார்த்திகை தீபமானது உச்சிபிள்ளையார்கோவில் அருகே உள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அறநிலையத்துறை வாதம்
திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இன்று அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. இதில் அறநிலையத்துறை சார்பில், மனுதாரர் ராமரவிக்குமார் தீபம் ஏற்ற கூறிய தூணானது சமணர்கள் பயன்படுத்திய தூண் ஆகும். நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்களே இது.
சமணர்களின் தூண்
மதுரையின் அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனிவாசன் சமண தூண்கள் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார். உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளது தான் உண்மையான தீபத் தூண் என்று அறநிலையத்துறை சார்பில் கோர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications