அடிதூள்! படுவேகமாக பையோ-மைனிங்.. கலக்கலாக மாறும் பெருங்குடி குப்பை கிடங்கு! வியக்கும் நெட்டிசன்கள்
பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது.
சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். மேலும், முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்
குப்பையை முறையாக அப்புறப்படுத்துவது என்பது பல ஊர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக மக்கள்தொகையை கொண்ட இடங்களில் இது ரொம்பவே கடினம்.
மக்களிடம் இருந்து குப்பைகளை பெற்று, அதை பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்ய வேண்டிவற்றை மறுசுழற்சி செய்து. மற்ற குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது என்பது மிக பெரிய பணி.

குப்பை
தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. தனிநபர் வீடுகள், பெருநிறுவனங்கள், பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இதில் அடக்கம்.. சென்னையில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், சேகரிப்படும் குப்பைகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இவை பெரும்பாலும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளிலேயே கொட்டப்பட்டு வருகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கு
வடசென்னையில் கொடுங்கையூர், தென்சென்னையில் பெருங்குடி பகுதியிலும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதில் தென்சென்னையில் அமைந்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 1988 முதலே குப்பைகள் கொட்ட்பபட்டு வருகிறது. சுமார் 228 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், ஒவ்வொரு நாளும் 3000 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

சதுப்பு நிலம் ஏன் முக்கியம்
சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். ஏனென்றால், சதுப்புநிலம் என்பது பல்லுயிர்கள் வாழும் பகுதி. நன்னீர் சதுப்புநிலம் எப்போதும் மற்ற பகுதிகளை காட்டிலும் 10 மடங்கு அதிகமான நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும். இங்கு கொட்டப்படும் குப்பைகள் முறையாக கையாள்பபடுவதில்லை என்றும் இதனால் இந்த பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்ததாக நீண்ட காலமாகவே புகார்கள் இருந்தனர்.

பயோ-மைனிங்
இதற்கிடையே பெருங்குடி குப்பை கொட்டும் கிடங்கில் குப்பைகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மை இந்தியா நிதி, மாநில அரசின் நிதி, சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்புடன் இத்திடம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
|
பெருங்குடி குப்பை கிடங்கு வீடியோ
இதற்கிடையே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ட்விட்டரில், "பயோமைனிங் பணிகளை விரைவுபடுத்திய பிறகு பெருங்குடி குப்பைத் கிடங்கில் இருக்கும் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறதா.. பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடியில் அனைத்து கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளனர். மேலும், முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
-
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications