அடிதூள்! படுவேகமாக பையோ-மைனிங்.. கலக்கலாக மாறும் பெருங்குடி குப்பை கிடங்கு! வியக்கும் நெட்டிசன்கள்
பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது.
சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். மேலும், முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்
குப்பையை முறையாக அப்புறப்படுத்துவது என்பது பல ஊர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக மக்கள்தொகையை கொண்ட இடங்களில் இது ரொம்பவே கடினம்.
மக்களிடம் இருந்து குப்பைகளை பெற்று, அதை பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்ய வேண்டிவற்றை மறுசுழற்சி செய்து. மற்ற குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது என்பது மிக பெரிய பணி.

குப்பை
தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. தனிநபர் வீடுகள், பெருநிறுவனங்கள், பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இதில் அடக்கம்.. சென்னையில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், சேகரிப்படும் குப்பைகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இவை பெரும்பாலும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளிலேயே கொட்டப்பட்டு வருகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கு
வடசென்னையில் கொடுங்கையூர், தென்சென்னையில் பெருங்குடி பகுதியிலும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதில் தென்சென்னையில் அமைந்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 1988 முதலே குப்பைகள் கொட்ட்பபட்டு வருகிறது. சுமார் 228 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், ஒவ்வொரு நாளும் 3000 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

சதுப்பு நிலம் ஏன் முக்கியம்
சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். ஏனென்றால், சதுப்புநிலம் என்பது பல்லுயிர்கள் வாழும் பகுதி. நன்னீர் சதுப்புநிலம் எப்போதும் மற்ற பகுதிகளை காட்டிலும் 10 மடங்கு அதிகமான நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும். இங்கு கொட்டப்படும் குப்பைகள் முறையாக கையாள்பபடுவதில்லை என்றும் இதனால் இந்த பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்ததாக நீண்ட காலமாகவே புகார்கள் இருந்தனர்.

பயோ-மைனிங்
இதற்கிடையே பெருங்குடி குப்பை கொட்டும் கிடங்கில் குப்பைகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மை இந்தியா நிதி, மாநில அரசின் நிதி, சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்புடன் இத்திடம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
|
பெருங்குடி குப்பை கிடங்கு வீடியோ
இதற்கிடையே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ட்விட்டரில், "பயோமைனிங் பணிகளை விரைவுபடுத்திய பிறகு பெருங்குடி குப்பைத் கிடங்கில் இருக்கும் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறதா.. பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடியில் அனைத்து கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளனர். மேலும், முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications