டெல்டா + தென் மாவட்டங்கள் போச்சு.. எடப்பாடிக்கு போன வார்னிங் மெசேஜ்.. பதட்டத்தோடு சொன்ன வார்த்தை
சென்னை: அதிமுகவில் தொடர்ந்து நடக்கும் மோதல்களால் கட்சிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்ற எச்சரிக்கை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றுள்ளதாம்.
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்கள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. முக்கியமாக டெல்டா மற்றும் தென் மண்டலங்களில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

தென் மண்டலத்தில் சரியும் எடப்பாடி
ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019, 2015 லோக்சபா தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில், டெல்டாவில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாத காரணத்தால் கடுமையான சரிவை எடப்பாடி சந்தித்தார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மண்டல அரசியலில் தற்போது நடந்துள்ளது.
முன்னதாக அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எடப்பாடிக்கு போன வார்னிங்
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் பேரவை சார்பில் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை வளாகம், வைகைசாலை பிரிவு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் வரைந்து அதில் முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை பழனிச்சாமியே தேவர் மண்ணில் காலடி வைக்காதே என்று எழுதப்பட்ட வாசகங்களோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்தே அதிமுகவில் தொடர்ந்து நடக்கும் மோதல்களால் கட்சிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்ற எச்சரிக்கை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றுள்ளதாம்.
அவசர அவசரமாக எடப்பாடி கருத்து
இதையடுத்தே அவசர அவசரமாக, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார்.
அதனை பெறுவதற்கான அத்தனை முயற்சிகளையும் அதிமுக எடுக்கும். அதேபோல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க அதிமுக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications