Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காற்றில் கலந்த நஞ்சு.. மூச்சை பிடித்து ஓடிய மக்கள்.. ஆய்வில் ஷாக் ரிசல்ட்.. என்ன நடக்குது எண்ணூரில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.

Huge shock among the people over the Ennore Gas Leak issue in Coromandal Company

அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அம்மோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அதிர்ச்சி ரிசல்ட்: எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன. எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் கடல் நீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட காற்றிலும், கடல் நீரிலும் அமோனியாவின் கலப்பு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அறிக்கையில் வெளியிட்டு உள்ளார். காற்றிலும், கடல் நீரிலும் அமோனியாவின் கலப்பு அதிகரித்திருப்பது உறுதியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்: எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூச்சு திணறல்; எண்ணூர் ரசாயன தொழிற்சாலையில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் பலரும் கடுமையாக மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டனர். அங்கே உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கே தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+