இது வீடா கஞ்சா குடோனா.. கணவர், மனைவியை கொத்தாக அள்ளிய செங்கல்பட்டு போலீஸ்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணவர் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் இருந்த 2.350 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா உள்ளிட்டப் போதைப் பொருட்களின் விற்பனையும், புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கும்பல், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் புழகத்திற்கு, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக, அக்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து, தமிழகத்தில் கஞ்சா பயன்பாட்டை ஒழித்துக்கட்டும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்டப் போதைப் பொருட்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசாருடன், தமிழக போலீசாரும் இணைந்து, ஆந்திரா, குஜராத் போன்ற தமிழகம் வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொதண்டு, கஞ்சாவை கடத்தி வரும் நபர்களை, கையும், களவுமாக பிடித்து வருவதோடு, கஞ்சா உள்ளிட்டப் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசாரின் பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி, ஆங்காங்கே கஞ்சா கடத்தப்படுவதும், ரகசியமாக விற்பனை செய்யப்படுவதும், கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டில், வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்து வந்த கணவர் மற்றும் மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு தண்டுகரை, ஆண்டாள் நகரில் வசிப்பவர் வின்சென்ட். இவரது மனைவி ஜமுனா. இந்நிலையில், இருவரும் வீட்டில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் தலைமையில் சோதனை செய்தனர்.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அவர்கள் வீட்டில் இருந்து 2.350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த கணவர், மனைவியையும் கைது செய்தனர். இருவரையும் கைது செய்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், கணவர், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணவர் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications