புடவையில் தூக்கு போட்டு கொண்டு இறந்த மனைவி.. மறு முந்தானையில் தொங்கி உயிர் விட்ட கணவர்!
சென்னை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
Recommended Video
சென்னை: புடவையில் தூக்கு போட்டு கொண்டு மனைவி தொங்க.. அதை பார்த்து பதறி போன கணவனும் அதே புடவையில் தூக்கில் தொங்கிய சம்பவம் சென்னை மக்களை உலுக்கி உள்ளது.
செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மதன். இவருக்கு 38 வயதாகிறது. டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு விட்டு அதன் மூலம் தொழில் புரிந்து வருகிறார்
மனைவி பெயர் கௌசல்யா. வயசு 35. 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் இவர்களுக்கு 9 வயதில் வெற்றிமாறன் என்ற மகனும், பிரவீனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். ரெண்டு பேருமே ஒரு பிரைவேட் ஸ்கூலில் படித்து வருகிறார்கள்.
ரூமுக்கு ஓடினார்
புருஷன் - பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே எப்பவுமே சண்டையும் தகராறுமாக இருக்குமாம். இப்படித்தான் நேற்று மதியானமும் சண்டை வந்துள்ளது. இதில் ஒரு கட்டத்தில் மனசு வெறுத்துபோன கௌசல்யா, புடவையை எடுத்து கொண்டு ஒரு ரூமுக்குள் ஓடினார்.
ஒரே புடவை
அங்கு ஃபேனில் தூக்கு மாட்டி கொண்டு சிறிது நேரத்தில் பிணமானார். இதை பார்த்து அலறிய மதனும் அதே புடவையில் தூக்கிட்டு தொங்கினார். இருவருமே ஒரே புடவையில் அடுத்தடுத்து ஒன்றாக தூக்கு போட்டு தொங்கினார்கள்.
கதறினார்கள்
சாயங்காலம் ஸ்கூல் விட்டு குழந்தைகள் 2 பேரும் வீட்டுக்கு வந்தால், வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக 2 குழந்தைகளும் எட்டி பார்த்தால், அம்மா-அப்பா ரெண்டு பேருமே இறந்த நிலையில் கிடந்ததை கண்டு கதறினார்கள்.
விசாரணை
உடனடியாக செங்குன்றம் போலீசில் தகவல் சொல்லப்பட்டது. விரைந்துவந்த போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றவர்களை பறிகொடுத்த 2 பிஞ்சுகளும் தவித்த தவிப்பையும், கதறி அழுததையும் கண்டு அப்பகுதி மக்களும் கண்கலங்கினார்கள்.