சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”என்னை கைது செய்ய போறாங்க..” போன மாசமே ட்விட்டரில் பதிவிட்ட திருச்சி சிவா மகன்- உதவுவாரா அண்ணாமலை?

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் என்னை கைது செய்வார்கள் என ட்விட்டரில் கடந்த மாதம் பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

    திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது - காவல் நிலையம் முன்பு காவல் துறையினர் குறிப்பு - வீடியோ

    திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த மே 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.

    பாஜகவில் சேர்ந்தாரே திருச்சி சிவா மகன் சூர்யா.. பஸ் கடத்தல், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது பாஜகவில் சேர்ந்தாரே திருச்சி சிவா மகன் சூர்யா.. பஸ் கடத்தல், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

    பரபரப்பு ட்வீட்

    பரபரப்பு ட்வீட்

    இந்த நிலையில் கடந்த மாதம் ட்விட்டரில் பதிவு ஒன்றை சூர்யா சிவா வெளியிட்டார். அதில், "24 மணி நேரத்தில் என்னை கைது செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். எனக்கு இது நடக்கும் என்று தெரியும். உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு நன்றி.

    ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன

    ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன

    பொய் வழக்குகளை போடுவது திமுகவுக்கு பெரிய விசயம் அல்ல. எதையும் சந்திக்க கூடிய மன நிலையில் தான் நான் இருக்கிறேன் வாருங்கள் வருக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எங்கள் தலைவர் உங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டு வரலாற்று சிறப்புமிக்க நாளை ஏற்படுத்துவார்." என பதிவிட்டிருந்தார்.

    விபத்து தொடர்பான வழக்கில் கைது

    விபத்து தொடர்பான வழக்கில் கைது

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு நடைபெற்ற விபத்து தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் திருச்சி சிவா புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் இந்த வழக்கு தொடர்பாக தன்னை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மிரட்டி வருவதாகவும் தன்னை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்..

    சூர்யா சிவா கைது

    சூர்யா சிவா கைது

    இந்நிலையில் சூர்யா சிவாவை கைது செய்த திருச்சி போலீசார் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலான கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுனர். இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    English summary
    I am going to be arrested - Suriya siva arrested after one month of tweet: அடுத்த 24 மணி நேரத்தில் என்னை கைது செய்வார்கள் என ட்விட்டரில் கடந்த மாதம் பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X