நான் முக்காடு போடல.. வெயிலுக்கு துப்பட்டாவை தலையில் அணிந்தேன்.. வீடியோவை மறுத்த லதா ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தொடர்பான மோசடி வழக்கில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் முக்காடு போட்டு சென்றது விவாதமான நிலையில் அதுபற்றி லதா ரஜினிகாந்த் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் 2014ம் ஆண்டில் வெளியான திரைப்படம் கோச்சடையான். 3 டி வடிவில் வெளியான இந்த திரைப்படத்துக்கு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கதை அமைத்து இருந்தார். ஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், தீபிகா படுகோன், ஆதி, நாசர் உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் திரையரங்கில் நன்கு ஓடவில்லை. நஷ்டம் ஏற்பட்டது. அதோடு திரைப்படம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

i-am-not-wearing-veil-on-head-latha-rajinikanth-refused-and-explains

அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது கோச்சடையான் திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டதாகவும், குறித்த காலத்தில் அந்த கடனை திரும்ப வழங்கததால் லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2015 முதல் கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. நிபந்தனை முன்ஜாமீன் பெற்றதால் லதா ரஜினிகாந்த் கைது செய்யப்படவில்லை. வழக்கு விசாரணைக்கு அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் தான் முந்தைய வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று லதா ரஜினிகாந்த் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்துக்கு செல்லும்போது தலையில் முக்காடு போட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனை பலரும் விமர்சனம் செய்தனர்.

இதற்கிடையே தான் லதா ரஜினிகாந்த் முக்காடு போட்டு நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வாரண்ட் எதுவும் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை. நான் மோசடி எதுவும் செய்யவில்லை. நான் செலிப்பிரிட்டியா இருப்பதாக அவர்கள் வன்மத்துடன் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன். நான் தலையில் முக்காடு எல்லாம் போட்டு செல்லவில்லை. வெயில் அடித்ததால் தான் துப்பட்டாவை தலையில் போட்டு அப்படி செய்தேன்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+