பிரபாகரன் புகைப்படம் எடிட்.. ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான்தான்.. ராஜீவ் காந்தி ஒரே போடு!
சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பெரியாரை விமர்சித்து வருகிறார். இவருக்கு பெரியாரிய ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும், அவரின் முற்றுகையிட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார்.
வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார்.
அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications