அப்படித்தான்.. எங்களுக்கு இந்தி தெரியாது.. இமிகிரேஷன் மறுக்கப்பட்ட தமிழருக்காக கனிமொழி குரல்!
மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுக்கப்பட்டதற்கு மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுக்கப்பட்டதற்கு மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் இமிகிரேஷன் மறுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநில மக்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன நடந்தது
தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இரண்டு நாட்களுக்கு முன் நியூயார்க் செல்வதற்காக மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த குடியேற்றப் பிரிவு அதிகாரி அவரிடம் இந்தியில் பேசி இருக்கிறார். ஆனால் இந்தி தெரியாத, ஆப்ரகாம் சாமுவேல் அந்த அதிகாரியை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு போ
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மொழி வெறி பிடித்த அதிகாரி, இந்தி தெரியாது என்றால் தமிழ்நாட்டிற்கே போ, என்று கோபமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டிவிட் செய்திருக்கும் ஆப்ரகாம் சாமுவேல், பிரதமர் மோடியிடம் புகாரும் அளித்துள்ளார்.
|
கனிமொழி கண்டனம்
இதற்கு தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில் ''நான் ஓர் இந்திய பெண்..நான் இந்தி பேச மாட்டேன்'' என்று மிகவும் கோபமாக குறிப்பிட்டுள்ளார். ''நாங்க இப்படித்தான் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று பணியில் கனிமொழி கெத்தாக டிவிட் செய்துள்ளார்.
|
வரவேற்பு
கனிமொழியின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. கனிமொழி கொடுத்தது நெத்தியடி பதில் என்று பலர் கூறியுள்ளனர். இவர், எங்கே அப்பாவி மக்களின் குரல்வளைகள் நெறிக்கப்படுகிறதோ அங்கே ஓங்கி ஒலித்து அதிகார வர்க்கத்தை அலறவிடும் அக்கா கனிமொழியின் குரல்'' என்றுள்ளார் என்றுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications