Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபிராமியை சந்திக்கவே இல்லை.. "குழந்தைகளுடன்" நான் தனியாகத்தான் இருக்கிறேன்.. கணவர் விஜய் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அபிராமி விஷயத்தில் நீதிமன்றமே கடும் ஆத்திரம்- வீடியோ

    சென்னை: அபிராமியை நான் சந்திக்கவே இல்லை. குழந்தைகளின் நினைவாக நான் தனியாகத்தான் இருக்கிறேன் என கணவர் விஜய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    கமலின் குணா திரைப்படத்திற்கு பிறகு அபிராமி என்ற பெயர் பிரசித்தி பெற்றது என்றால் அதற்கு குன்றத்தூர் அபிராமிதான் காரணம். குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவிதான் அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

    அபிராமிக்கு பிரியாணி சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதனால் கடை கடையாக போய் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு நாள் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிட செல்லும் போது அங்குள்ள கேஷியருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இரு முறை ஜாமீன்

    இரு முறை ஜாமீன்

    இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தான் பெற்ற இரு குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் தப்பி செல்ல முயற்சித்த அபிராமியையும் சுந்தரத்தையும் போலீஸார் கைது செய்தனர். சுமார் 90 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள அபிராமி ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருமுறை ஜாமீன் கோரினார்.

    அபிராமி

    அபிராமி

    ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறையில் இருக்கும் தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை என மனஉளைச்சலில் அபிராமி இருப்பதாக சிறை துறையினர் கூறினர்.

    பெற்றோருடன் தங்கிய விஜய்

    பெற்றோருடன் தங்கிய விஜய்

    இதுகுறித்து கணவர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவர் ஜெயிலுக்கு போனது முதல் நான் அவரை சென்று சந்திக்கவே இல்லை. குழந்தைகள் இறந்த சமயத்தில் மட்டும் அவருடைய பெற்றோருடன் தங்கியிருந்தேன்.

    குழந்தைகள் நினைவுகள்

    குழந்தைகள் நினைவுகள்

    அதன்பிறகு நான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு வாழ்ந்து வருகிறேன் என்று கண்ணீர் மல்க விஜய் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+