சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் நிலைப்பாட்டை கூறினேன்.. இனி விஜயகாந்த்தான் முடிவெடுக்க வேண்டும்.. சரத்குமார் சூசக பேட்டி!

எனது தேர்தல் நிலைப்பாட்டை கூறினேன், முடிவு எடுப்பது இனி விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயகாந்துடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு.. ஏன் தெரியுமா?- வீடியோ

    சென்னை: எனது தேர்தல் நிலைப்பாட்டை கூறினேன், முடிவு எடுப்பது இனி விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரன்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று சரத்குமார் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

    சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு பின் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். சந்திப்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

    Also Read | ஜா புயல் நேரத்தில சூழ்நிலை சரியில்ல... அதான் மோடி வரல.. அதிமுகவின் சூப்பர் விளக்கம் Also Read | ஜா புயல் நேரத்தில சூழ்நிலை சரியில்ல... அதான் மோடி வரல.. அதிமுகவின் சூப்பர் விளக்கம்

    பெரிய மகிழ்ச்சி

    பெரிய மகிழ்ச்சி

    சரத்குமார் தனது பேட்டியில், விஜயகாந்த் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயகாந்த் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த போது, அமெரிக்காவிலேயே சென்று சந்திக்க விரும்பினேன். விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தேன்.

    நல்ல நலம்

    நல்ல நலம்

    விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடும் அளவிற்கு வலிமையாக உள்ளார். அவரை விரைவில் தேர்தல் மேடைகளில் பார்க்க முடியும். அவர் தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார்.

    அரசியல் பேசினோம்

    அரசியல் பேசினோம்

    அதே சமயம் நாங்கள் இருவரும் அரசியலும் பேசினோம். அரசியல் குறித்து எனது கருத்தை விஜயகாந்திடம் கூறினேன். ஒரே கருத்துள்ள கட்சிகள் இந்த தேர்தலில் ஒன்றாக கூட்டணி வைக்கும்.

    கூட்டணி முடிவு

    கூட்டணி முடிவு

    கூட்டணி குறித்து முடிவு எடுப்பது விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறது. மார்ச் 5ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும், என்று சரத்குமார் கூறியுள்ளார்.

    English summary
    I hope DMDK chief Vijayakanth will take a better decision says SMK chief Sarathkumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X