தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ் குமார் நியமனம்
சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஸ் அதிகாரி கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் செயலாளராக இருந்த ஆனந்த் பாட்டீல் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டதால் புதிய செயலாளாராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் அண்மையில் மத்திய அரசு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநரின் தனி செயலாளரக நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் தனி செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அதன்பிறகு தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் அவரது செயலாளராகவும் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டார்.

மத்திய அரசின் பணிக்காக அவர் மாற்றப்பட்டதையடுத்து, ஒன்றிய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் தனி செயலாளராக கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications