ICICI Bank: மினிமம் பேலன்ஸ்.. புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி
சென்னை: புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது ஐசிஐசிஐ. இனிமேல் நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகை ரூ.50 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை (Average minimum balance) நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி.

இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25,000 ஆகவும், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய முறையே தொடரும் என்றும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500, இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட தொகையை, வாடிக்கையாளர் தங்களது சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும். வங்கிகள் அந்தக் கணக்கின் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த மினிமம் பேலன்ஸை பயன்படுத்தும். இந்த மினிமம் பேலன்ஸை வைத்திருக்க சூழலில், அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கும்.
ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கென மினிமம் பேலன்ஸ் விதிகளை வைத்துள்ளது. மெட்ரோ நகரங்களுக்கு என்றால் அதிக தொகையும், கிராமங்களுக்கு என்றால் குறைந்த தொகையும் மினிமம் பேலன்ஸ் ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
உள்நாட்டு வங்கிகளில், ஐசிஐசிஐ தான் மிக உயர்ந்த குறைந்தபட்ச இருப்புத் தேவையை நிர்ணயித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2020 ஆம் ஆண்டில் மினிமம் பேலன்ஸ் விதியை முற்றிலுமாக ரத்து செய்தது, அதே நேரத்தில் பெரும்பாலான வங்கிகள் செயல்பாட்டுச் செலவுகளை நிர்வகிக்க குறைந்த மினிமம் பேலன்ஸ், பொதுவாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை பராமரிக்க அறிவுறுத்துகின்றன.
ஐசிஐசிஐ வங்கி இப்போது UPI பணம் செலுத்துதலுக்கான பரிவர்த்தனைகளுக்கும் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்கும் பிஏக்களுக்கு, ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு பரிவர்த்தனைக்கு 2 பேஸிஸ் பாயிண்ட்களை வசூலிக்கும், இது அதிகபட்சமாக ரூ.6 இருக்கும். எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்காத பிஏக்களுக்கு, கட்டணம் 4 பேஸிஸ் பாயிண்ட்களாக இருக்கும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications