நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகள்! அனுமதி வழங்க லஞ்சம் போதும்! ராஜேஸ்வரி பிரியா விளாசல்!
சென்னை: ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்? என வினவியுள்ள அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, பெரும்பாலான கட்டிடங்கள்,வீடுகள் எல்லாம் ஏரியில் கட்டபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும்,அனுமதி வழங்க லஞ்சம் போதும் என்ற நிலை உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜேஸ்வரி பிரியா முன் வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வீடுகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளில் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப் படுகிறதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

சென்னையில் மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை. குறிப்பாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை இன்னும் மாறவில்லை.
இதனிடையே இது குறித்து ராஜேஸ்வரி பிரியா பகிர்ந்துகொண்ட தகவல் வருமாறு;
''ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்? பெரும்பாலான கட்டிடங்கள்,வீடுகள் எல்லாம் ஏரியில் கட்டபட்டுள்ளது(அனுமதி வழங்க லஞ்சம் போதும்).
வெயில் நேரத்தில் செய்யப்பட வேண்டிய மழை நீர் வடிகால் பணிகள் மழை வரும்வரை காத்திருப்பு பட்டியலில் ஏன் போடபட்டது?
மழை நீரால் தலைநகரம் தத்தளிப்பது அவமானத்தின் உச்சம்.40 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லை.நோயாளிகளும்,கர்ப்பினி பெண்களும்,முதியோர்களும் வேதனையில் துடிக்கிறார்கள்.பலர் வீடின்றி தவிக்கும் அவல நிலை.
மழை நீரில் நடந்து சென்று மக்கள் அவதியில் தவிப்பதை பார்ப்பதைவிட (குறிப்பாக உதயநிதி அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து) மக்களை பாதுகாக்கும் பணிகளை முன்பே செய்திருந்தால் இன்று மக்கள் அனைவரும் உங்களை தேடிவந்து நன்றி சொல்லி இருப்பார்கள். போதும் இந்த நாடகம்!'' இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications