8 மாத காத்திருப்பு..குரூப் 4 தேர்வில் முறைகேடுகளா?..உடனே இதை செய்ய வேண்டும்..பாய்ந்து வந்த அண்ணாமலை
சென்னை: தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பாக தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சியால் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 6 வகையான குரூப்-4 பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதியிருந்தனர்.

8 மாதங்களுக்கு பிறகு..
முதலில் சுமார் 7 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்து 117 ஆக அதிகரித்தது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்ட நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 24 ஆம் தேதி தேர்வு முடிவு வெளியானது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரே பயிற்சி மையத்தில்..
குறிப்பாக தென்காசியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் படித்த தேர்வர்கள் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக புகார்கள் எழுந்தன. அதேபோல நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்விலும் முறைகேடு புகார்கள் எழுந்தன. பல லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் தேர்வர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

உரிய விளக்கம் பெற்ற பின்னர்..
இதற்கு சட்டப்பேரவையில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "குரூப் 4 நில அளவர் தேர்வு முறைகேடு என்ற புகார் எழுந்தவுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது உரிய விளக்கம் பெற்ற பின்னர் அது பற்றி பேரவையில் தெரிவிக்கப்படும். குழப்பங்கள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விளக்கம் அளித்தார்.

இளைஞர்களை அவமதிப்பது போல..
இதனிடையே, தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணி
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.

மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும்
உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications