பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய அனுமதி கேட்கும் இளையராஜா - நிர்வாகம் பதில் தர ஹைகோர்ட் ஆணை
பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஸ்டூடியோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஒரு நாள் சென்று தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஸ்டுடியோ நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவின் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அந்த இடத்தை வேறு தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், இளையராஜாவை அந்த ரிகார்டிங் தியேட்டரை காலி செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தியது. இதனால் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு தற்போது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அந்த ஸ்டுடியோவுக்கு ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும்,அங்கு தான் கைப்பட எழுதி வைத்துள்ள இசை கோப்புகள், இசை கருவிகள்,தனக்கு கிடைத்த அவார்டுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு ஸ்டுடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்
அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,பிரசாத் ஸ்டுடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,ஸ்டூடியோ இருந்த இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், அவருடைய உடமைகளை அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும்,எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். எனினும் தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டுடியோ நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
அந்த வாதத்தை கேட்ட நீதிபதி, எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில்,ஸ்டுடியோ இடத்தில் இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதை தாண்டி மனிதாபிமான அடிப்படையிலும்,நீண்ட நாள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஏன் இசையமைப்பாளர் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க கூடாது என கேள்வி எழுப்பினார். அது குறித்து ஸ்டுடியோ நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
-
உயிரையே கொண்டு வந்துடுவாரு.. எஸ்பிபி செய்ததை மறக்க முடியுமா? பிறந்தநாளில் இளையராஜா உருக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications