சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையை நெருங்கும் புயல்.. 15-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.. நிழலாடும் 2015

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை நெருங்கும் புயல்.. 15-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ

    சென்னை: அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும். அந்த புயல் 15-ஆம் தேதி சென்னையை நெருங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது தற்போது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் வரை பரவியுள்ளது.

    இந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு

    மீன் பிடிக்க செல்லவேண்டாம்

    மீன் பிடிக்க செல்லவேண்டாம்

    இதன் காரணமாக அந்தமான், நிக்கோபார் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நகரும் வாய்ப்பு

    நகரும் வாய்ப்பு

    இதற்கிடையே தனியார் வானிலை ஆய்வாளர்களும், சர்வதேச வானிலை அமைப்புகளும் அந்தமான் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கணிப்பு

    கணிப்பு

    வருகிற 14-ஆம் தேதி சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். 15-ஆம் தேதி காலை சென்னையை நெருங்கும். அன்றைய தினம் மாலை புதுவை நோக்கி நகர்ந்து அன்று இரவு அல்லது 16-ஆம் தேதி காலையில் புதுவை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கரையை கடந்ததும் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    மாற்றம் ஏற்பட வாய்ப்பு

    மாற்றம் ஏற்பட வாய்ப்பு

    இப்போதைய நிலையில் காற்று வீசும் திசையை வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசை மாறினால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே 13-ஆம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    India Meteorological Department says that there will be cyclone in Bay of Bengal which moves from Andaman. If it happens then there will be rain on November 15 in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X