அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு முக்கிய அறிவிப்பு.. கல்வித்துறை அதிரடி
சென்னை: பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதேவகையிலான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்ய வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாகவும், சில பள்ளிகளில் குறைவாகவும் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதை கவனிக்கும் பள்ளிகல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளும், ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளும் ஒன்றோடு ஒன்று பேசி, அனுமதிக்கப்பட்ட அளவில் ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவிட்டு வருகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் நிறைவேற்றப்படுவதன் மூலம், அரசுக்கு நிதி இழப்பு குறையும் என்பதுடன், பணி நிரவல் மூலம், குறைவான ஆசிரியர்களை கொண்டு இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரம் அதிகரிக்கும் என்பது முக்கிய காரணம் ஆகும். அதேபோல் பள்ளி கல்வியாண்டு தொடங்கும் முன்பே மாறுதல் மற்று பணி நிரவல் திட்டம் செயல்படுத்துவதை அரசு வழக்கமாக வைத்துள்ளது.
அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பார்வை குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாணவர் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.உபரி ஆசிரியர்கள் விவரங்களையும், பள்ளி நிர்வாகத்தின் மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரங்களையும் முதன்மை கல்வி அலுவலரிடம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்.
பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதே வகையான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்ய வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து அரசாணை எண் 146-ல் தெரிவிக்கப்பட்டு உள்ள நெறிமுறைகளின்படி தொடர் பணிநிரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications