Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரியில் 5 நாளைக்கு ரூட்டே மாறுது! கனரக வாகனங்களுக்கு நோ அனுமதி.. சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என்று தொடர் விடுமுறைகள் வருவதால், சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு அதிகமாக வருவது வழக்கமாகும்.. இந்த கூட்ட நெரிசலை சமாளிக்கவும், நீலகிரி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் இன்னலை தவிர்க்கவும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது... அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

nilgiris tourists Heavy Vehicles

அரசு விடுமுறை கொண்டாட்டம்

மற்றொருபுறம் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. வாரம் முழுவதும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இதையடுத்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவிற்கும் பயணப்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் வசதிக்காக, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் வருகின்றன..

ஆயுத பூஜை, பள்ளி விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.,. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். நீலகிரி அருகிலேயே கேரளா உள்ளதால், அந்த மாநிலத்திலிருந்தும், ஏராளமானோர் நீலகிரியில் குவிந்துவருகிறார்கள்.

நீலகிரி சுற்றுலா பயணிகள்

இதனால் நீலகிரியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் வருவதால் இ-பாஸ் சோதனையில் ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். தீவிர இ-பாஸ் சோதனைக்கு பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதனால், மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ பாஸ் மையத்தில் சோதனைக்காக வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்று செல்கின்றன.

போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து போலீசார் செல்லும்போது, தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகிறார்கள்.. மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமுடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.. தாழ்வான பகுதியில் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தொடர் விடுமுறையால் நீலகிரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் அந்த ரூல்ஸ்

- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.

- மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

- அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்

- குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும்.

- அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

- கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும்

- கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

- காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது" என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+