தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லை! "டிரிப்" போன பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்.. விக்கித்த எக்ஸ்பர்ட்ஸ்
சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம்..கடந்த ஜூன் மாதத்தில் நடந்து உள்ளது. சுற்றுசுழலியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது?
பொதுவாக மே மாதத்தில் தமிழ்நாட்டில் பாலூட்டி உயிரினங்கள் இடமாற்றம் அடைவது வழக்கம். அதேபோல் பறவை இனங்களில் சில வகையும், பூச்சி இனங்களில் சில வகையும் இடமாற்றம் அடையும்.
பட்டாம்பூச்சிகளிலும் கூட டார்க் ப்ளூ டைகர், ப்ளூ டைகர், காமன் க்ரோ வகை பட்டாம் பூச்சிகள் இடமாற்றம் அடைவது வழக்கம்.

பட்டாம்பூச்சிகள்
மேற்கு தொடர்பு மலையிலும், கிழக்கு தொடர்ச்சி மலையிலும் இருக்கும் பட்டாம்பூச்சிகள் இப்படி இடமாற்றம் அடைவது வழக்கம். ஆனால் பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடையாது. இந்த லைம் பட்டாம்பூச்சிகள் என்பது எலுமிச்சை வண்ணத்தை கொண்டு இருக்கும். வெளிப்புறத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும். உள்ளே செல்ல செல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இடமாற்றம்
இவை பொதுவாக மேற்கு தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்தாலும் இடமாற்றம் அடையும் குணம் கொண்டது கிடையாது. அப்படியே இடமாற்றம் அடைந்தாலும் ஒரு பகுதியில் இருந்து அருகிலேயே இருக்கும் இன்னொரு பகுதிக்கு மொத்தமாக கூட்டமாக பறந்து செல்லும். அதுவும் கூட பல வருட இடைவெளியில்தான் நடக்கும்.

மே மாதத்தில்
அப்படியே இடம் மாற்றினாலும் மே மாதத்தில்தான் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடையும். கடந்த 2018ம் ஆண்டில் பவானி, மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு நிமிடத்திற்கு 200 என்று ஆயிரக்கணக்கில் ஒரே நாளில் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்தன. அதன்பின் லைம் பட்டாம்பூச்சிகள் எங்கும் இடமாற்றம் அடையவில்லை. ஆனால் இந்த முறை ஜூன் மாதத்தில் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன.

லைம் பட்டாம்பூச்சிகள்
இதுவரை தமிழ்நாட்டில் லைம் பட்டாம்பூச்சிகள் ஜூன் மாதத்தில் இடமாற்றம் அடைந்ததே இல்லை. கடந்த ஜூன் 9-14 மற்றும் ஜூன் 17-19 ஆகிய தேதிகளில் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன. தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த இடமாற்றம் அதிகம் நடந்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு 10 லைம் பட்டாம்பூச்சிகள் வீதம் இடமாற்றம் அடைந்துள்ளன. இதன் மூலம் ஒரு நாளுக்கு 14 ஆயிரத்திற்கும் அதிகமான லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன.

வியப்பு
தமிழ்நாட்டில் இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு என்று சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் டூ ஜூன் மாதத்தில் திடீரென தமிழ்நாட்டில் எதிர்பார்க்காமல் பெய்த மழையே இந்த லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் லைம் பட்டாம்பூச்சிகள் இப்படி அதிகமாக இடமாற்றம் அடைந்துள்ளன.

திருப்பூரில் அதிகம்
அதிலும் திருப்பூரில்தான் அதிகமாக லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன. இங்கு நிமிடத்திற்கு 25 லைம் பட்டாம்பூச்சிகள் வரை இடமாற்றம் அடைந்துள்ளன. வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. எதிர்பார்க்காத மழை இதற்கு காரணமாக இருக்கலாம். இல்லையென்றால் வேறு ஏதாவது வானிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுற்றுசூழல் வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications