ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து.. அடித்துச் சொல்வது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்! விளாசும் காங்கிரஸ்!
சென்னை: ஆயுர்வேத மருத்துவத் துறையில் கோமியம்தான் அமிர்த நீர் என்று அழைக்கப்படுகிறது; ஆயுர்வேத துறையில் கோமியம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது; என் உணவு என் உரிமை என்கிறார்கள்... என் மருந்து என் உரிமை என்பதை ஏற்க மறுக்கிறார்களே என தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறியதாவது: ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சிப் பூர்வமாக மாட்டின் சிறுநீரான கோமியம், அமிர்த நீர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து என சொல்கின்றனர். சங்க இலக்கியங்களில் மாட்டுச் சாணத்தால்தான் வீடுகளின் முற்றத்தில் பூசி இருந்தனர். சாணத்தின் நடுவே பூவரசம் பூவை வைத்து வழிபாடு செய்கிறவர்கள்.

மாட்டு சிறுநீரில் - கோமியத்தில் கிருமி நாசினி
மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி இருந்ததால்தான் முன்னோர்கள் இப்படிச் செய்தனர். அப்ப மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிற போது மாட்டு சிறுநீரான கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. எல்லா மிருகங்களையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இது ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை எடுத்துக் கொள்கின்றனர். ஆகையால் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறிய கருத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது; இது ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் மருந்துதான் கோமியம்
ஆயுர்வேதத்தில் 80 வகையான நோய்களுக்கு கோமியத்தை பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி குறிப்பிட்ட காய்ச்சல் கூட அந்த 80 வகையான நோய்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்கக் கூடியவர் சும்மா சொல்லிவிடுவாரா?
என் மருந்து என் உரிமை
என் உணவு என் உரிமை என நீங்கள் பேசுகிறீர்களே.. என் மருந்து என் உரிமை என நாங்கள் சொல்கிறோம்.. விஞ்ஞானப்பூர்வமாக மருந்து என நாங்கள் சொல்லும்போது ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? இந்திய பண்பாட்டு முறையில் நாங்கள் எதனை குறிப்பிட்டாலும் அதனை ஏற்க முடியாது என்கிறார்கள். கோமியம் பதப்படுத்தப்படுகிறது.. பஞ்ச கவ்யம் அமேசானில் கூட விற்பனையாகிறது. நான் அலோபதி மருத்துவர்தான். ஆனால் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்தாக இருக்கிறது என நான் கூறுகிறேன். இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழிசைக்கு செல்வப் பெருந்தகை எதிர்ப்பு
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப் பெருந்தகை தமது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
வடக்கே போல் மாட்டரசியல் இங்கே வேண்டாம்
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications