பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண் காந்தி. இவர் வழக்கம் போல் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போதே அவர் உயிர் உடலை விட்டு பிரிந்துவிட்டது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு அருண்காந்தி உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் அருண்காந்தி ஈடுபட்டு வந்துள்ளார். மயிலாப்பூர் பகுதியில் ஓரளவு அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பரிச்சயமானவர். ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அருண்காந்தியை போல் ஆயிரக்கணக்கான போலீஸார் சென்னை முழுவதும் இரவு பகல் பாராது பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பணிச்சுமை இருந்துவருவதால் ஒரு வித மன அழுத்தத்திற்கு அவர் ஆளாகியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி பணியில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிகழ்வு வேதனையை தருவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்கள் நலனில் அரசும், தமிழக காவல்துறை தலைவரும் அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications