Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நாய் - பூனை வளர்த்தால் ரூ.5,000 ‛ஃபைன்'.. வீடு வீடாக வரும் அதிகாரிகள்! உடனே இதை செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நாய் - பூனைகளை வீட்டில் வளர்த்தால் அதற்கான உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை நவம்பர் 24ம் தேதிக்குள் பெற வேண்டும். இல்லாவிட்டால் வீடு வீடாக வரும் அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர். அதேபோல் நாய்களை வெளியே அழைத்து செல்வோர் கழுத்து பட்டையுடன் கூட்டி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ரூ.500 ‛ஃபைன்' விதிப்பதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெருநாய் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

in-chennai-dog-and-cat-owners-who-fail-to-obtain-licences-will-be-fined-rs-5-000-by-the-city-corpora

அதேவேளையில் இன்னொரு தரப்போ, தெருநாய்களை சுதந்திரமாக உலவ விட வேண்டும். தெருநாய்களை சீண்டினால் தான் கடிக்கும். சாதாரணமாக கடந்து சென்றால் ஒன்றும் செய்யாது என்று கூறி வருகின்றனர். இப்படி விவாதங்கள் போய் கொண்டிருக்கும் சூழலில் தான்

சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மாதம் வரை காலஅவகசாம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதிக்குள் நாய், பூனை வளர்ப்பதற்கு லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்து லைசென்ஸ் பெறாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர்.

அதேபோல் வீட்டில் வளர்க்கும் நாய்களை பொது இடங்களான பூங்கா, சாலைகளுக்கு அழைத்து வரும்பபோது அதன் கழுத்தில் பட்டை (Leash) அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.500அபராதத்தை அந்தந்த வார்டுகளின் சுகாதார இன்ஸ்பெக்டர் வசூலிப்பார். அதேபோல் பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது நாய்கள் அசுத்தம் செய்ய அனுமதிக்க கூடாது. மீறி நாய்கள் அசுத்தம் செய்தால் அதனை அகற்ற வேண்டிய பெறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு உள்ளது என்று தீர்மானம் தெரிவித்துள்ளது.

நாய் மற்றும் பூனைகளுக்கு லைசென்ஸ் பெற உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செல்லபிராணியின் போட்டோ மற்றும் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றி ரூ.50 செலவில் லைசென்ஸ் பெற்று கொள்ள முடியும். இந்த விண்ணப்பத்தை மண்ட கால்நடை அதிகாரி ஆய்வு செய்து. உரிமம் வழங்குவார்.

தற்போது வரை 9,579 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை எடுத்து கொண்டால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏராளமானவர்கள் இன்னும் லைசென்ஸ் பெறவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும். மேலும் நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் உள்பட மொத்தம் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+