கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் ரூ.1.90 கோடி ஹாவாலா பணம் பறிமுதல்.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்?
சென்னை: சென்னையில் ரூ.1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைக்கில் கட்டுக்கட்டாக இந்த பணத்தை எடுத்து சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
சென்னை யானை கவுனி பகுதி வழியாக பைக்கில் ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 2 பேர் பைக்கில் வந்தனர்.

அவர்கள் பை வைத்திருந்தனர். அவர்களை தடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணம் பற்றி கேட்டபோதும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அது ஹவாலா பணம் என்பதும், மொத்தம் ரூ.1.90 கோடியை அவர்கள் பைக்கில் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து படேல், அஸ்வின் என 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications