திமுகவில் திரும்பிய பக்கமெல்லாம் ''கலகம்''! முதல்வர் நிம்மதிக்கு உலை வைக்கும் உட்கட்சி பஞ்சாயத்து!
சென்னை: திமுகவில் திரும்பிய பக்கமெல்லாம் உட்கட்சி பஞ்சாயத்தும், கோஷ்டிப்பூசல்களும் அதிகரித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கட்சி பஞ்சாயத்து இப்போது ஊருக்கு ஒரு கோஷ்டிப் பூசல் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. குறிப்பாக நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் நிலவும் பனிப்போர் தான் முதலமைச்சர் ஸ்டாலினை நிம்மதி இழக்க வைத்துள்ளது. நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கச்சைக் கட்டி நிற்பது தான் இப்போது ஹாட் டாபிக்.

அதேபோல் தேனியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தங்க.தமிழ்ச்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தத்தால் கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அன்று கூட தாமரைக்குளம் திமுக நிர்வாகிகள் எடப்பாடியை சந்திக்க சேலம் புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்ட திமுகவை பொறுத்தவரை மேயர் மகேஷ், அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் என மூன்று டீம்கள் முட்டி மோதி அரசியல் செய்கின்றன.
அதேபோல் விழுப்புரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை நிற்க வைத்து மறித்து கட்சிக்காரர்கள் கேள்வி கேட்ட நிகழ்வுகள் எல்லாம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர்களான பிரகாஷுக்கும், பர்கூர் மதியழகனுக்கும் எதிராக சத்தமின்றி ஒரு யுத்தத்தை தொடங்கியிருகிறார்கள் உடன் பிறப்புகள். ஒரு சிலர் கட்சியைவிட்டு வெளியேறி அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள்.
கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இதேபோல் தான் தென்காசி, வேலூர், ஈரோடு, குறிப்பாக கோவை, உள்ளிட்ட ஊர்களிலும் திமுக நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமையில்லாத நிலை காணப்படுகிறது. உட்கட்சி பஞ்சாயத்தை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் அன்பகம் கலையும், ஆர்.எஸ்.பாரதியும் தான் கவனித்துக் கொள்கிறார்கள். இதனிடையே உட்கட்சி பிரச்சனைகளை முதலமைச்சர் ஸ்டாலினோ, அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ நேரடியாக தலையிட்டு பேசினால் தான் இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என்பது மூத்த முன்னோடிகளின் கருத்தாக உள்ளது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை












Click it and Unblock the Notifications