பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கோரிய வழக்கு.. பள்ளிகல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனம் ஒன்றில் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் 4 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நடத்துனர் கைது செய்யபட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள், மூலமாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது போல சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க கோரி, தமிழக அரசுக்கு கடந்த மாதம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கைக்கு, தமிழக அரசு செவி சாய்யக்கவும் இல்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை.
எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம் கண்காணிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கு குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications