சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே!
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், வெயிலின் தாக்கம் குறையாததால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். அவ்வப்போது ஓரிரு மாவட்டங்களில் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், பொன்னமராவதி, திருமங்கலம், கோத்தகிரி, மதுரை, அறந்தாங்கி, உதகமண்டலம் பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications