"என்னது.. அந்த தொகுதியா".. கேட்டதுமே ஜெர்க் ஆன திருமாவளவன்.. இப்படி இழுத்துட்டு போனா எப்படி..!
திருமாவளவன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது
சென்னை: "என்னது.. அந்த தொகுதியா" என்று திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தாராம்.. திமுக கூட்டணியில் சீட் மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் எதுவும் முடிவாகாததால், நித்தம் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. அப்படி வந்ததுதான் இந்த தகவலும்...!
வழக்கமாக தேர்தல் என்றால் முதலில் கூட்டணி கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.. பிறகு பகிரங்கமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.. இறுதியில் ஒரு சுமூக முடிவுக்கு வருவார்கள்.. இதுதான் நடக்கும்.
ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட 4 மாசமாக திமுக கூட்டணி பற்றிய ஒரு முடிவுக்கு யாராலும் வர முடியவில்லை.. இந்த நிமிஷம் வரை வேட்பாளர் லிஸ்ட்டும் வெளியாகவில்லை.. எனினும், ஒருவழியாக தொகுதி ஒதுக்கீடுகள் மெல்ல மெல்ல முடிவாகி வருகின்றன.

திருமாவளவன்
அந்த வகையில் விசிகவுக்கு 6 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.. 25 தொகுதிகளை தேர்வு செய்து வைத்து கொண்டு, அதில் 15 தொகுதிகளை திமுகவிடம் கேட்க ஆரம்பித்தது விசிக.. ஆரம்பமே 15, 20 சீட் என்றுதான் பேச்சு தொடங்கியது.. அதாவது கண்டிப்பாக இரட்டை இலக்கத்திற்கு குறையாமல் தொகுதிகளை பெறுவோம் என்று விசிக நம்பிக்கை தெரிவித்தபடியே இருந்தது..

திமுக கூட்டணி
ஆனால், அது அப்படியே மெல்ல மெல்ல குறைந்து ஒற்றை இலக்கத்தில் வந்து நின்றது. இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.. அவற்றில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக ஏற்கனவே திருமாவும் அறிவித்துவிட்டார். மேலும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது..

ஷாக்
அப்போதுதான், "பொதுத் தொகுதியிலும் போட்டியிடுவது என்ற அடிப்படையில் உடுமலைப்பேட்டை தொகுதியை எடுத்துக்கொள்ளுங்களேன்" என்று திமுக தரப்பில் கூற, அதை கேட்டு சற்று ஷாக் ஆனாராம் திருமாவளவன். "அந்த தொகுதி வேண்டாம், சோழவந்தான் தொகுதியை தரமுடியுமா" என்று விசிக தரப்பில் கேட்க, அதற்கும் திமுக தரப்பில் மறுப்பு சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விடுதலை சிறுத்தைகள்
உடுமலைப்பேட்டையை பொறுத்தவரை, அனைத்து சமூக மக்களும் உள்ள தொகுதி ஆகும்.. அதிலும் தெலுங்கு பேசும் மக்களும் அதிகளவில் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.. அதனால், இந்த தொகுதியே விசிகவுக்கு ஒதுக்கப்படுமா என்பதும் உறுதியாகவில்லை.. மொத்தத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியையே திமுகவும் கேட்பதால்தான் இப்போது வரை லிஸ்ட் வெளியாகாமல் இழுபறி ஆவதாக தெரிகிறது.

விடுதலை சிறுத்தைகள்
உடுமலைப்பேட்டையை பொறுத்தவரை, அனைத்து சமூக மக்களும் உள்ள தொகுதி ஆகும்.. அதிலும் தெலுங்கு பேசும் மக்களும் அதிகளவில் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.. அதனால், இந்த தொகுதியே விசிகவுக்கு ஒதுக்கப்படுமா என்பதும் உறுதியாகவில்லை.. மொத்தத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியையே திமுகவும் கேட்பதால்தான் இப்போது வரை லிஸ்ட் வெளியாமல் இழுபறி ஆவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications