பழனிக்கு போன வருமான வரித் துறை அதிகாரி.. அவரது காரை பயன்படுத்தி டிரைவர் செய்த பலே காரியம்!
சென்னை: வருமான வரித் துறை அதிகாரியின் காரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வருமான துறை ஆணையரின் போர்டு வைத்த காரில் பயணம் செய்த மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸார்
அப்போது அவர்களில் ஒருவர் தப்பியோடினார். பின்னர் மற்ற இருவரை போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொரட்டூரை சேர்ந்த வாணி, முருகன் என தெரியவந்தது. தப்பியோடிய நபர் பிரகாஷ் என்றும் தெரியவந்தது.

பெசன்ட் நகர்
வாணியின் கணவர் பெசன்ட் நகரில் உள்ள வருமான வரித் துறை அதிகாரியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் பழனியிலுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றதால் அவரது காரை பயன்படுத்தி கஞ்சா வியாபாரம் செய்தது தெரியவந்தது.

வாணி வீடு
அடுத்து கொரட்டூரில் உள்ள வாணி வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாஷை போலீஸார் தேடி வருகிறார்கள். இதுவரை இவர்கள் வேறு எங்கெல்லாம் கஞ்சாவை கடத்தினர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடத்திய கும்பல்
மேலும் இவர்களுக்கு பின்னர் வேறு யாரேனும் கும்பல் இருக்கின்றனரா, இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைக்கிறது போன்ற தகவல்களையும் போலீஸார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். இந்த வருமான வரித் துறை அதிகாரியின் காரை பயன்படுத்தி இவர்கள் கஞ்சா கடத்தியது இதுதான் முதல்முறையா இல்லை ஏற்கெனவே நிறைய முறை கடத்தியுள்ளனரா போன்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications