Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛டிமிக்கி’.. செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு வருமான வரித்துறை 3வது சம்மன்! அடுத்தது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் 3வது முறையாக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளது. இந்த சம்மனுக்கு அவர் ஆஜராகாவிட்டால் அவர் மீது எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அசோக்கிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண வசூல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Income tax officials gives summons to minister Senthil Balajis brother Ashok for 3rd time

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையால் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.

முன்னதாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கரூரில் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்றவர்களை அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து தாக்கினர்.

அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அசோக் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். சில நாட்கள் வரை நடந்த இந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது. அப்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுக்கட்டாக பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் தான் அசோக்கிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 2 முறை அசோக்கிற்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அசோக் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். மேலும் அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவலும் தெரியாத நிலை உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தான் வருமான வரித்துறை சார்பில் அசோக்கிற்கு 3வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த முறையும் அசோக் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அசோக் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.

அதாவது சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தான் அசோக்கை சம்மன் மூலம் வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். இதனால் இதுதொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+