எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு.. ஸ்டாலின் தங்கியிருந்த விடுதியிலும் சோதனை
சென்னை: திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர் எ.வ. வேலு பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில், எ.வ. வேலுவுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இந்த நிலையில், இவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் ஆகிய பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருவதாக தெரிகிறது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20க்கும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.
திருவண்ணாமலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த ஒருமணி நேரமாக சோதனை நடைபெற்று வரும் எ.வ. வேலுவின் கல்லூரியில் தான், ஸ்டாலின் நேற்று இரவு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாரத்திற்காக அவர் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கின்றனர். அதன்பிறகு, கல்லூரி மூடப்பட உள்ளேயிருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications