சீன அடாவடிக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வாசகர்களே உங்க கருத்து என்ன
சென்னை: சீனாவின் அடாவடி, வலுக்கட்டாய அத்துமீறல், ஆக்கிரமிப்பு தொடர் கதையாகியுள்ளது. அவர்களின் மறுபக்கத்தை நமது ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் கண்டுள்ளது.
ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது சீன ராணுவத்தின் கொலைகார செயல். 20 ராணுவ வீரர்களை இந்தியா இழந்துள்ளது. இந்த இழப்பை இந்திய மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. கொரோனா உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தனது நாட்டிலிருந்து இது பரவியது என்ற வெட்கமோ வருத்தமோ கொஞ்சம் கூட இல்லாமல், இந்தியாவுக்கு உதவுவதை விட்டு விட்டு இந்தியாவின் ரத்தம் குடிக்க அலைகிறது சீனா.

சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவுக்கு எப்படி பாடம் புகட்டலாம்.. என்ன செய்தால் சீனா வழிக்கு வரும்.. உங்களது கருத்துக்களை எடுத்து வையுங்கள். சீனாவின் கொட்டத்தை அடக்க அரசுகள் என்ன செய்ய வேண்டும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த உங்களது கருத்துக்களை அறிய காத்திருக்கிறோம்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]












Click it and Unblock the Notifications