இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது- குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் பேருக்கு கீழே குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆக உள்ளது. கடந்த 24மணிநேரத்தில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் 2,02,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் மேலே பதிவானது. தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்புகள் 4,28,38,524 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,21,24,284 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,12,109 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,02,131 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.93% ஆக உள்ள நிலையில் இதுவரை 176 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வரையிலான புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் 176 கோடி டோஸுக்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2 கோடிபேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications